tamilnadu

img

ஜூன் 30க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

முதல்வர் பதில்

திருச்சி,ஜூன் 26-   திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின்  நடவடிக்கை களால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோ னாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வரு கிறது. ஊரடங்கால் கொரோனா  பெருமளவில் கட்டுப்படுத்தப்பட் டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

திருச்சி சிப்காட்டில் 250 ஏக்க ரில் ரூ.200 கோடியில் தொழிற் பூங்கா ஏற்படுத்தப்படும். திருச்சி யில் தொழில் தொடங்க 5 நிறுவ னங்களுடன் ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது. தைவான், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப் படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உரிய முடி வெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.